Monday 6 April, 2009

மாமியார் மருமக :-))

இவங்க ரெண்டு பேர் பத்தி நினைச்சா எல்லாருக்கும் என்ன தோணுது?? சர்க்கஸ்? கச்சேரி ? போலீஸ் ஸ்டேஷன்? திருவிழா? ஜூ? பேய் ? பிசாசு? பூதம்? குட்டி சாத்தான் ? ம்ம்,,,,இப்போ தமிழ் நாட்டுல நடக்கிற பல காமெடி சமாச்சாரத்துல முதன்மை இடத்தை நிலை நாட்டி கொண்டிருகின்றது இந்த உறவு தாங்க,,,, மாமியார் மருமகள புகழ்ந்து பேசுறதும் ,, மருமக மாமியார புகழ்ந்து பேசறத கேக்க ஆயிரம் காதுகள் ..வேணும் . இவங்க இரெண்டு பேரும் விளையாடாத விளையாட்டு இல்லங்க ,,,,கபடி , கைபந்து , கால் பந்து , முத்திரை போட்டி , எல்லாம்ம்ம்ம்ம் ,,,,,


பெரியவங்க சொன்னாங்க மருமக மாமியார தாயா பாக்கணும்,,, நம்ம மருமக ஒரு படி மேல போய் பேயா பாக்க ஆரம்பிச்சிட்டாங்க ,,, மாமியார் ,, இன்னும் நல்லவங்க ,, மகளா பாக்க சொன்னா? பாகிஸ்தான் தீவிர வாதிய பாக்கற மாதிரி பாக்கறாங்க ,,,,,, அதெல்லாம் இருக்கட்டும் விளையாட்டுல ரொம்ப சந்தோஷம் அடைந்தவர்களை கேட்டேன் , எல்லாம் நம் நண்பர்கள் தான் ,,இவங்க ரெண்டு பேர் பத்தி நினைச்சா என்ன தோணுது?

தோழன் தோழியின் உண்மை வாக்கு மூலம்!

தோழன்ஒன்று : நான் அழுதுருவேன் ( பாவம் இவரு எத்தன நாள் கண்ணீர் சிந்தினாரோ ,,, ஹி ஹி )


தோழன்இரண்டு : எனக்கு தலைல சொட்ட தங்கச்சி ( அவங்க சண்டைல இவரு தலைய பிச்சிகிட்டாறு போல ஹோ ஹோ )


தோழன்மூன்று : ஏன் மனைவி ரொம்ப நல்லவ,, எங்க அம்மா அதுக்கும் மேல ,,,( ஒரே காமெடி )

மருமக ஒன்று : அவ தலையில இடி விழ ,,,, ( பாவம், அவங்க மாமியார பத்தி கேட்டா வேலைக்காரி பத்தி சொல்லிட்டாங்க போல )

மருமக இரண்டு : அவங்க எங்க அம்மா மாதிரி ( அடுத்த நொடி நான் அழுதுட்டேன் )

மாமியார் :என் புள்ளைய மயக்கிட்டா பாவி பொண்ணு ( பில்லி ,, சூனியம் எபிபிச்ட் )

மாமியார்: ,,, வாயாடி மங்கம்மா ,,, தெரியாம என் பையனுக்கு கட்டிவைச்சிட்டேன் ,,இவள வெட்டி விட்டு வேற பொண்ண கட்டி வைக்கபோறேன் என் பையனுக்கு (ஈ. பி .கோ காங்பிர்மேது )

தோழன் : என் சோக கதைய கேளுன்னு ( பாட ஆரம்பிச்சிட்டாரு )


தோழன் : பிறவி ஒன்று இருந்தால் இவர்கள் இரெண்டு பேரும் இல்லாத இடத்தில் பிறத்தல் வேணும் ( ரொம்ப பாவம் )


இதுல ஸ்பெஷல் என்னன்னா ,,, மாமியார் மருமக சண்டைல ரொம்ப பாவத்துக்கு உரிய ஜீவன் யாருன்னா? , நடுவுல மாட்டிக்கிட்டு திக்கு தெச தெரியாம ரெண்டு பக்கமும் இடி வாங்கறது அந்த அப்பாவி கணவன் தான் ,,, இதுல முக்கியமான விஷயம் என்னனா ,, இவங்க ரெண்டு பேருக்கும் பாசத்துல தான் பிரச்சனையே வரும் :-) ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,,, இந்த சண்டைகள் ஒரு சுகமான சங்கீதம் ,, இதுல சில சமயம் வீணை சத்தம் கேட்கும், சில சமயம் நாதஸ்வரம் , சில சமயம் மத்தளம் , பல சமயம் ட்ரும்ஸ் தான் ,,,, இந்த தப்பு தாளங்களை வரிசை படுத்தி இசைத்தால் வரும் கீதம் குழலினும் இனிமையானது,,, இசைத்து பாருங்க ,,,,
இருந்தாலும், என்ன தான் பாட ட்ரை செஞ்சாலும் ,,, வராத இசை ......டப்பாங்குத்துதான் ,, சும்மா பிச்சிகினு போகும்ல ;-))) டான் டா நக்க டா நா கூ நா கா தான் ;-)))))) ஹா ஹா ஹா இதுவும் இசை தான் :-)



மாஞ்சா

வீணா

Friday 3 April, 2009

அல்லாரிப்பு


''அல்லாரிப்பு'' என்பது மலரின் மொட்டு! இனிமையான தொடக்கம். கண்களில் தொடங்கி, பல திசைகளிலும் இசையின் வாயிலாக, சிரிப்பின் சிதறலாய் , என் நண்பர்களின் வெற்றி பயணத்தில், உடன் போக விரும்பும் இந்த மொட்டு!!

மாஞ்சா! மாஞ்சா !! பேர கேட்டவுடன சும்மா சிரிப்பு வருதுல்ல ? வரனும் அப்டி வரலைனாலும், சிரிங்க ப்ளீஸ் ! மகிழ்ச்சியான, அறுக்கவே முடியாத மாஞ்சா போட்ட பதிவுடன் வந்து இம்சை பண்ணுவேன் விரைவில்!!

அன்புடன் ,

வீணா!