Monday 6 April, 2009

மாமியார் மருமக :-))

இவங்க ரெண்டு பேர் பத்தி நினைச்சா எல்லாருக்கும் என்ன தோணுது?? சர்க்கஸ்? கச்சேரி ? போலீஸ் ஸ்டேஷன்? திருவிழா? ஜூ? பேய் ? பிசாசு? பூதம்? குட்டி சாத்தான் ? ம்ம்,,,,இப்போ தமிழ் நாட்டுல நடக்கிற பல காமெடி சமாச்சாரத்துல முதன்மை இடத்தை நிலை நாட்டி கொண்டிருகின்றது இந்த உறவு தாங்க,,,, மாமியார் மருமகள புகழ்ந்து பேசுறதும் ,, மருமக மாமியார புகழ்ந்து பேசறத கேக்க ஆயிரம் காதுகள் ..வேணும் . இவங்க இரெண்டு பேரும் விளையாடாத விளையாட்டு இல்லங்க ,,,,கபடி , கைபந்து , கால் பந்து , முத்திரை போட்டி , எல்லாம்ம்ம்ம்ம் ,,,,,


பெரியவங்க சொன்னாங்க மருமக மாமியார தாயா பாக்கணும்,,, நம்ம மருமக ஒரு படி மேல போய் பேயா பாக்க ஆரம்பிச்சிட்டாங்க ,,, மாமியார் ,, இன்னும் நல்லவங்க ,, மகளா பாக்க சொன்னா? பாகிஸ்தான் தீவிர வாதிய பாக்கற மாதிரி பாக்கறாங்க ,,,,,, அதெல்லாம் இருக்கட்டும் விளையாட்டுல ரொம்ப சந்தோஷம் அடைந்தவர்களை கேட்டேன் , எல்லாம் நம் நண்பர்கள் தான் ,,இவங்க ரெண்டு பேர் பத்தி நினைச்சா என்ன தோணுது?

தோழன் தோழியின் உண்மை வாக்கு மூலம்!

தோழன்ஒன்று : நான் அழுதுருவேன் ( பாவம் இவரு எத்தன நாள் கண்ணீர் சிந்தினாரோ ,,, ஹி ஹி )


தோழன்இரண்டு : எனக்கு தலைல சொட்ட தங்கச்சி ( அவங்க சண்டைல இவரு தலைய பிச்சிகிட்டாறு போல ஹோ ஹோ )


தோழன்மூன்று : ஏன் மனைவி ரொம்ப நல்லவ,, எங்க அம்மா அதுக்கும் மேல ,,,( ஒரே காமெடி )

மருமக ஒன்று : அவ தலையில இடி விழ ,,,, ( பாவம், அவங்க மாமியார பத்தி கேட்டா வேலைக்காரி பத்தி சொல்லிட்டாங்க போல )

மருமக இரண்டு : அவங்க எங்க அம்மா மாதிரி ( அடுத்த நொடி நான் அழுதுட்டேன் )

மாமியார் :என் புள்ளைய மயக்கிட்டா பாவி பொண்ணு ( பில்லி ,, சூனியம் எபிபிச்ட் )

மாமியார்: ,,, வாயாடி மங்கம்மா ,,, தெரியாம என் பையனுக்கு கட்டிவைச்சிட்டேன் ,,இவள வெட்டி விட்டு வேற பொண்ண கட்டி வைக்கபோறேன் என் பையனுக்கு (ஈ. பி .கோ காங்பிர்மேது )

தோழன் : என் சோக கதைய கேளுன்னு ( பாட ஆரம்பிச்சிட்டாரு )


தோழன் : பிறவி ஒன்று இருந்தால் இவர்கள் இரெண்டு பேரும் இல்லாத இடத்தில் பிறத்தல் வேணும் ( ரொம்ப பாவம் )


இதுல ஸ்பெஷல் என்னன்னா ,,, மாமியார் மருமக சண்டைல ரொம்ப பாவத்துக்கு உரிய ஜீவன் யாருன்னா? , நடுவுல மாட்டிக்கிட்டு திக்கு தெச தெரியாம ரெண்டு பக்கமும் இடி வாங்கறது அந்த அப்பாவி கணவன் தான் ,,, இதுல முக்கியமான விஷயம் என்னனா ,, இவங்க ரெண்டு பேருக்கும் பாசத்துல தான் பிரச்சனையே வரும் :-) ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,,, இந்த சண்டைகள் ஒரு சுகமான சங்கீதம் ,, இதுல சில சமயம் வீணை சத்தம் கேட்கும், சில சமயம் நாதஸ்வரம் , சில சமயம் மத்தளம் , பல சமயம் ட்ரும்ஸ் தான் ,,,, இந்த தப்பு தாளங்களை வரிசை படுத்தி இசைத்தால் வரும் கீதம் குழலினும் இனிமையானது,,, இசைத்து பாருங்க ,,,,
இருந்தாலும், என்ன தான் பாட ட்ரை செஞ்சாலும் ,,, வராத இசை ......டப்பாங்குத்துதான் ,, சும்மா பிச்சிகினு போகும்ல ;-))) டான் டா நக்க டா நா கூ நா கா தான் ;-)))))) ஹா ஹா ஹா இதுவும் இசை தான் :-)



மாஞ்சா

வீணா

18 comments:

  1. என்ன சகோதரி!!,
    மருமகள் ஆகும் முன்னரே!!
    இப்படி எழுதுட்டீங்க..
    நீங்கள் திருமணத்திற்கு பிறகு, மாமியாரிடம் மகளாக நடக்க
    முயற்சி செய்யுங்கள்...நிச்சயம் அவர்களும்...தாயாக நடந்து
    கொள்வார்கள்.
    முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    Raji

    ReplyDelete
  2. நல்லா பன்னிக்கீறீங்கோ காமெடி ...


    ஆனாலும் ரொம்ப சிந்திக்கனும்.

    ReplyDelete
  3. //// ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,,, இந்த சண்டைகள் ஒரு சுகமான சங்கீதம் ,, இதுல சில சமயம் வீணை சத்தம் கேட்கும், சில சமயம் நாதஸ்வரம் , சில சமயம் மத்தளம் , பல சமயம் ட்ரும்ஸ் தான் ,,,, இந்த தப்பு தாளங்களை வரிசை படுத்தி இசைத்தால் வரும் கீதம் குழலினும் இனிமையானது,,, இசைத்து பாருங்க ,,,,////

    கல்யாணத்துக்கு முன்னாடி சுலபமா சொல்லிடலாம் கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச
    வருஷம் கழிச்சு இதேபோல சொல்லணும் சரியா ?

    ReplyDelete
  4. /// ரொம்ப பாவத்துக்கு உரிய ஜீவன் யாருன்னா?///

    வேற யாரு? இந்த ஜீவன்தான்!!;;)))

    ReplyDelete
  5. என்ன தான் சிரிச்சுக்கிடே எழுதினாலும் மனசுக்குள்ள இருக்க பயம் அங்க அங்க வெளிய தலை காட்டுது....


    வாக்கு.......... மூலம் எடுக்க ரொம்பவே மெனுக்கெட்டீங்க போல...

    //இந்த தப்பு தாளங்களை வரிசை படுத்தி இசைத்தால் வரும் கீதம் குழலினும் இனிமையானது,,,//

    கீழ இருந்து மேலா... இல்ல மேல இருந்து கீழா...

    அத்துடன் வருகின்ற இசை சாவு மோலமாக இருந்தால்....

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றிகள் ,,,,, பொடியன் அவர்களே ,, உங்ககிட்ட கேக்க மறந்துட்டேன் :-( சவுமேலம் ஹா ஹா ஹா சூப்பர் ஓஓஒ சூபேரரர்ர்

    ReplyDelete
  7. ஜீவன் அண்ணனா,, பாவப்பட்ட ஜீவனா????/// அண்ணி போன் நம்பர் தாங்க கொஞ்சம் பேசவேண்டி இருக்கு ;-))))

    ReplyDelete
  8. ஜீவன் said...
    //வேற யாரு? இந்த ஜீவன்தான்!!;;)))//

    ஹா ஹா ஹா...அமுதன் சந்துல சிந்து பாடிட்டீங்க

    ReplyDelete
  9. thanks yatchan sir,, yes mangai madam,,, cycle gap la jeevan annaa,, bus otitaru,,,,;-)

    ReplyDelete
  10. // ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,,, இந்த சண்டைகள் ஒரு சுகமான சங்கீதம் ,, இதுல சில சமயம் வீணை சத்தம் கேட்கும், சில சமயம் நாதஸ்வரம் , சில சமயம் மத்தளம் , பல சமயம் ட்ரும்ஸ் தான் ,,,, இந்த தப்பு தாளங்களை வரிசை படுத்தி இசைத்தால் வரும் கீதம் குழலினும் இனிமையானது,,, இசைத்து பாருங்க??//

    நல்லா எழுதியுள்ளீர்!!! சிந்திக்கவேண்டிய விசயம்!!

    ReplyDelete
  11. பொடியன் அவர்களே ஹா ஹா super,,

    thevamayam anna ,,,இது சுட்ட பழம் இல்ல ,,,, எங்க வீடுளா காய்த்த பழம் ,, partha effect thaan ;-))))

    ReplyDelete
  12. என்ன சகோதரி!!,
    மருமகள் ஆகும் முன்னரே!!
    இப்படி எழுதுட்டீங்க..
    நீங்கள் திருமணத்திற்கு பிறகு, மாமியாரிடம் மகளாக நடக்க
    முயற்சி செய்யுங்கள்...நிச்சயம் அவர்களும்...தாயாக நடந்து
    கொள்வார்கள்.
    முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    என்ன தான் சிரிச்சுக்கிடே எழுதினாலும்
    மனசுக்குள்ள இருக்க பயம் அங்க அங்க வெளிய தலை காட்டுது....
    ரிப்பீட்டூடூ
    நல்லா பன்னிக்கீறீங்கோ காமெடி ...
    அன்புடன்
    முருகன் கலா

    ReplyDelete
  13. நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க
    சிந்திக்க சிரிக்கவும் இருந்திச்சு.

    ReplyDelete
  14. //
    ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,,, இந்த சண்டைகள் ஒரு சுகமான சங்கீதம் ,, இதுல சில சமயம் வீணை சத்தம் கேட்கும், சில சமயம் நாதஸ்வரம் , சில சமயம் மத்தளம் , பல சமயம் ட்ரும்ஸ் தான் ,,,, இந்த தப்பு தாளங்களை வரிசை படுத்தி இசைத்தால் வரும் கீதம் குழலினும் இனிமையானது,,, இசைத்து பாருங்க
    //

    வீணை சத்தமா இல்லே இல்லே
    வெண்கலக் கடையிலே
    யானை நுழைந்த மாதிரி இருக்கும் சத்தம்
    அப்ளகட்டை எல்லாம் பறக்கும்
    அப்போ தலைலே ஒரு வீக்கம் வந்திடும்

    அப்புறமா பாத்திரம் எல்லாம் பறக்கும்
    அப்போ ரொம்ப சத்தமா கேக்குமே
    என்ன நான் சொல்லறது சரிதானே :))

    ReplyDelete
  15. vaigarai thendral annnaa,,,,,
    repeat aaaaa???? enaku oru loop hole kadachi eruku ;-)),,,, pathukaren erungaaa hehehhe

    ReplyDelete
  16. அப்ளகட்டை எல்லாம் பறக்கும் maaaa??
    ramyaaa,, hahhaa, super, kalakitenga ponga,, unga comment thaan top ;-))

    ReplyDelete